Friday 19 April 2019

600மேற்பட்ட குழந்தைகள் ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்றில் கலந்து கொண்டனர்


கோலாலம்பூர்-
கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 13ஆம் தேதி புக்கிட் கியாரா, ஜுவாரா அரங்கத்தில் நாடு தழுவிய நிலையில் நடைபெற்று வரும் 4ஆவது ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்றில் கோலாலம்பூரில் 7 முதல் 12 வயதிற்கு உட்பட்ட 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டார்கள். இந்தத் தேர்வுச் சுற்றில் நம்முடைய மலேசிய இந்தியர் குழந்தைகளும் கலந்து கொண்டு தங்களுடைய பூப்பந்து விளையாட்டு திறமையை வெளிக்காட்டியுள்ளார்கள்.

2012-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆஸ்ட்ரோ கேம் பேட்மிட்டன், 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளார்கள். நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அடிப்படையில், பூப்பந்து விளையாடும்  திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி சிறந்த விளையாட்டாளராக உருவாக்குவதே ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டனின் தலையாய நோக்கமாகும்.



அவ்வகையில், கெடா மாநிலத்தைச் சேர்ந்த பூபதி வேலயுதம் கேம் பேட்மிண்டனில் கலந்து கொண்டு மாநில ரீதியில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆகவே, தேசிய, சர்வதேச பூப்பந்து போட்டிகளில் தொடர்ந்து குழந்தைகள் தங்களுடைய திறமைகளைத் தக்க வைத்துக்கொள்ள ஆஸ்ட்ரோவின் கேம் பேட்மிண்டன் திட்டம் கடமைப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோ கேம் பேட்மிண்டன் தேர்வுச் சுற்று இவ்வாண்டு நாடு தாழுவிய 6 இடங்களில் இடம்பெறவுள்ளது. வரும் ஏப்ரல் 20, 27ஆம் தேதி முறையே சபாவில் கோத்தா கின்பாலு, சரவாக்கில் குசிங் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு www.astrokasih.org/ms/kem-badminton அல்லது www.facebook.com/myastrokasih முகநூல் அகப்பக்கத்தை வலம் வருங்கள்.


No comments:

Post a Comment