Friday 26 April 2019

இது என்னய்யா அப்பளத்திற்கு வந்த சோதனை? அப்பளம் பொட்டலத்தினுள் காற்று ஊதும் பணியாளர்

கோலாலம்பூர்-
இந்தியர்களின் உணவுகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது அப்பளம். வீடுகளிலும் விசேஷ நிகழ்வுகளிலும் ஆலய திருவிழாவிலும் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் அப்பளத்தை தனியாக பொட்டலம் கட்டி அதை விற்பனை செய்யும் உணவகங்களின் வாடிக்கையாகும்.(இதில் சில உணவகங்கள் விதிவிலக்காகின்றன)

பொட்டலம் கட்டி விற்பனை செய்யப்படும் அப்பளம் ஆரோக்கியமானது, பாதுகாப்பானது என எண்ணி இவ்வளவு நாட்களாக அதை உண்டு வந்த வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் இடி விழுந்தது போல காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உணவகப் பணியாளர் ஒருவர் அப்பளத்தை பொட்டலம் கட்டும்போது அதில் வாயுவை நிரப்புவதற்கு பதிலாக வாயால் காற்று ஊதி பொட்டலத்தை கட்டும் காணொளியை வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் எங்கு நடந்தது, எந்த உணவகம் போன்ற எந்த தகவலும் இணைக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு எதிராக சமூக வலைத்தலவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உணவகங்களில் அப்பளத்தை பொட்டலம் கட்டி அதை விற்பனை செய்வதையே பலர் விரும்பாத நிலையில் இத்தகைய நடவடிக்கை 'இனி பொட்டலம் கட்டிய அப்பளத்தை யாரும் தொடவே கூடாது' என்ற எண்ணத்தையே உருவாக்கி வருகிறது.

No comments:

Post a Comment