Monday 22 April 2019

இலங்கையில் குண்டு வெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பினார் ராதிகா

சென்னை-

இலங்கை தலைநகர் கொழும்பு,  மட்டக்களப்பில்  இடங்களில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில்102 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு சென்றிருந்த ராதிகா சரத்குமார் குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "சின்னமான் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment