Tuesday 16 April 2019

ரயில் மோதி தள்ளியதில் இருவர் மரணம்


கோலாலம்பூர்-
சுங்கை பூலோவிலிருந்து கெப்போங் நோக்கி வந்த கேடிஎம் ரயில் மோதியதில் இரு அந்நிய நாட்டவர்கள் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.03 மணியளவில் நிகழ்ந்தது.

30 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தபோது மியன்மார் நாட்டைச் சேர்ந்த அவ்விருவரும் தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரயில் மோதி தள்ளியது என்று கேடிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்விருவரையும் ரயில் மோதி தள்ளிய பின்னர் அதன் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவப்பரிசோதனைக்காக அவ்விருவரின் சடலங்களும் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.


No comments:

Post a Comment