Thursday 25 April 2019

மெட்ரிக்குலேஷன் இடங்கள் 40,000ஆக உயர்வு- அமைச்சரவையில் முடிவு

புத்ராஜெயா-
மெட்ரிக்குலேஷன் பயில்வதற்காக முன்பு வழங்கப்பட்ட 25,000 எண்ணிக்கையிலிருந்து 40,000ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் பூதாகரமாக வெடித்த மெட்ரிக்குலேஷன் விவகாரம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் வகையில் நடைமுறையில் உள்ள 25,000 இடங்களை 40,000ஆக உயர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை உயர்வில் 90% பூமிபுத்ராவினருக்கும் எஞ்சிய 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என பழைய நடைமுறையே பின்பற்றப்படும்.

இந்த எண்ணிக்கை உயர்வுக்கு தேவைபடும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment