Tuesday 16 April 2019

ஆலயத்திற்குச் சென்ற சிறுமிகள் மாயம்

பெட்டாலிங் ஜெயா-
நேற்று கொண்டாடப்பட்ட சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற இரு பதின்ம வயது சிறுமிகள் மாயமானது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

எம்.திவ்யா (16),என்.நட்ஷத்தரா (15) ஆகிய இரு சிறுமிகளும் நேற்றிரவு 11.40 மனியளவில் ஜாலான் காசிங் இண்டா, மெக்ஸ்வெல் டவர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய திவ்யாவின் தாயார் தி.சாந்தி, பள்ளி தோழிகளான இருவரும் தமிழ்ப் புத்தாண்டு பூசைக்காக ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
சில சமயங்களில் நட்ஷத்தரா வீட்டில் பொழுதை கழிக்கு திவ்யா, 10 நிமிடங்களில் வீட்டிற்கு வந்து விடுவார்.

ஆனால் சம்பவத்தன்று இரவு 11.00 மணியளவில் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய திவ்யா, கிரேப் வாகனத்திற்கு காத்திருப்பதாக கூறினார். ஆனால் இன்னமும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர் சொன்னார்.

நட்ஷத்தராவுடன் வீட்டின் கீழ்த்தளத்தில் கிரேப் வாகனத்திற்காக காத்திருந்த வேளையில் பின்னர் அதனை ரத்து செய்துள்ளனர்.

இதன் தொடர்பில் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரிடம் விசாரித்தபோது இரு சிறுமிகள் நடந்து சென்றதை கண்டதாக கூறியுள்ளார்.
10 நிமிடங்களுக்குள் என்ன நடந்து என்பதை கணிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

சிறுமிகள் மாயமானது தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து பேசிய பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் ஷானி சே டின், இப்புகாரை உறுதிபடுத்தியதோடு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

அதே வேளையில் இத்தகைய சம்பவம் பற்றி நிறுவனம் அறிந்திருக்கவில்லை என்று கிரேப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.  அவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்ததால் அதன் ஓட்டுநர் பயணி வேறொரு பயணியை ஏற்றிச் சென்றதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவலை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இச்சிறுமிகளை காண்போர் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment