Monday 29 April 2019

இந்து சமயத்தை இழிவாக பேசிய ஸம்ரி வினோத் கைது

பெட்டாலிங் ஜெயா-
இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசிய சர்ச்சைக்குரிய சமய போதகர் முகமட் ஸம்ரி வினோத் காளிமுத்து கைது செய்யப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்தியது.

பெர்லிஸ், ஆராவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஸம்ரி வினோத் கைது செய்யப்பட்டார்.

இந்து மத நம்பிக்கையையும் இந்துக்களின் தெய்வங்களையும் ஸம்ம்ரி வினோத் இழிவாக பேசிய காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கொதித்தெழுந்த இந்துக்கள் அவருக்கு எதிராக
நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார் செய்தனர்.

இனத்துவேஷ கருத்துகளை பேசியது குற்றவியல் சட்டம்  செக்‌ஷன் 298ஏ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தியது தொடர்பில் தகவல், பல்லூடக சட்டம் செக்‌ஷன் 233 ஆகியவற்றின் கீழ் ஸம்ரி வினோத் விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பெர்லிஸ் போலீஸ் தலைவர் நோர் முஷார் முகமர் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி கிளந்தான், கம்போங் பஞ்சோர் பள்ளிவாசலில் உரையாற்றிய ஸம்ரி வினோத் இந்து மதம் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார்.

No comments:

Post a Comment