Tuesday 16 April 2019

மாயமான இரு தோழிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா-
நேற்றிரவிலிருந்து (ஏப்.14) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இரு இந்திய சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற திவ்யா, நட்சத்திரா ஆகிய இரு பதின்ம வயது தோழிகள் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

அவ்விருவரும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுவர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சானி பின் சே மாட் தெரிவித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என கூறிய அவர், அதன் பின்னரே அவர்கள் எவ்வாறு மாயமாகினர் என்பது தெரிய வரும் என்றார்.

No comments:

Post a Comment