Tuesday 16 April 2019

பக்காத்தான் கூட்டணிக்கு இந்தியர்களின் ஆதரவு சரிந்து வருகிறது- சிவகுமார் எச்சரிக்கை

கோலாலம்பூர்-

தேசிய முன்னணியை புறக்கணித்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய இந்தியர்கள் தற்போது மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்புவதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் எச்சரித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய சமுதாயம் பெருமளவு ஆதரவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வழங்கினர். ஆனால் நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் (கேமரன் மலை, செமினி, ரந்தாவ்) இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கு சரிந்துள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது இந்திய சமுதாயம் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைச் செலவீனம் போன்றவற்றில் ஆளும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் இந்திய சமுதாயத்தின் மத்தியில் மனநிறைவை அளிக்காததால் இந்தியர்களின் ஆதரவு சரிந்து வருகிறது.

ஆயினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை. இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முனைய வேண்டும். அப்போதுதான் இந்திய சமுதாயத்தின் ஆதரவு இக்கூட்டணிக்கு வலுவாக இருக்கும் என்று ஜசெக துணைச் செயலாளருமான சிவகுமார் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment