Saturday 20 April 2019

மெட்ரிக்குலேஷன்: 2,200 இடங்கள் 'On- Off' முறையைச் சார்ந்ததா? மஸ்லி மாலிக்கை சாடினார் நஜிப்

கோலாலம்பூர்-
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,200 மெட்ரிக்குலேஷன் இடங்கள் 'On- Off' (தற்காலிகமானது) முறையை சார்ந்தது அல்ல என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடையும் இந்திய மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் 1,500 இல் இருந்து 2,200ஆக அவ்வெண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

கல்வி அமைச்சர் சொல்வதை போல் 'On- Off' முறையின்படி வாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை எனவும்  பூர்த்தி செய்யப்படாத மலாய்க்காரர்களின் இடங்களையே ஒதுக்கீடு செய்ததாகவும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு திட்டத்தின் கீழ் 2,200 இடங்கள் ஒதுக்கப்பட்டது என்று பேஸ்புக் பக்கத்தில் டத்தோஸ்ரீ நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.

'On- Off' திட்டம் என அதனை மிக சர்வ சாதாரணமாக குறிப்பிட வேண்டாம் என்று கல்வி அமைச்சரை சாடிய நஜிப், இந்த 2,200 இடங்களை இன்னும் அதிகரிக்க தேமு திட்டம் கொண்டிருந்தது என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment