Wednesday 29 July 2020

சட்டம் நடுநிலையாக செயல்படுகிறது- பிரதமர்

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்துறை நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை புலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

தனது நண்பருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனை வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் சட்டம் நிலைநாட்டப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.



ஆயினும் டத்தோஶ்ரீ நஜிப் இத்தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யவிருக்கும் முடிவை அரசாங்கம் மதிக்கிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது என்பதை புலப்படுத்தும் வகையில் அனைவருக்கும் வழிவிடப்படுகிறது என்று அவர் சொன்னார்.



No comments:

Post a Comment