Tuesday 28 July 2020

சமூக இடைவெளியை கடைபிடிக்காத நஜிப் ஆதரவாளர்கள்-டத்தோ நோர் ஹிஷாம் வேதனை

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் நிதி மோசடி வழக்கின் தீர்ப்பிற்காக இன்று நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்களால் சுகாதார தலைமை இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பெரும் திரளான ஆதரவாளர் கூட்டம் திரண்டது.

கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் நாட்டை தொற்றிக் கொண்டிருக்கும் சூழலில் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றாதது வேதனையளிக்கிறது என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கவலை தெரிவித்தார்.

பெரும் திரளானோர் திரண்ட கூட்டத்தில் சுய கட்டுப்பாடு யாரும் கடைபிடிக்காதது வேதனைக்குரியதாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment