Thursday 9 July 2020

தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரத்தில் சுயநலப்போக்கு எதுவும் கிடையாது- திருமதி இந்திராணி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட், தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரம் தொடர்பில் தனக்கு எவ்வித சுயநலப் போக்கும் கிடையாது. தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டே அக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் குரல் கொடுத்துள்ளேன் என்று பெனெராஜு இன்சான் இயக்கத்தின் தலைவி திருமதி இந்திராணி தெரிவித்தார்.

40 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள தாமான் துன் சமப்ந்தன் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  வீடமைப்புத் திட்டத்தின்போது அங்கு கோயில்,சூராவ், மண்டபம், சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்கு மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டு நில ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் திட்டமிட்டதைப்போல இந்த நான்கும் நிர்மாணிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் அந்நிலத்தில் புற்கள் காடு மண்டிக்கிடக்கின்றன.

இதன் தொடர்பில் அங்குள்ள மக்கள் தம்மிடம் முறையிட்டதன் விளைவாகவே தமது  இயக்கத்தின் மூலம் இந்நில விவகாரம் குறித்து குரல் எழுப்பியுள்ளேண்.

சட்ட ரீதியிலான வகையிலே தமது நடவடிக்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திருமதி இந்திராணி, தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இவ்விவகாரத்தை தாம் கையிலெடுத்ததாக அவர் சொன்னார்.

மேலும் இந்நில விவகாரம் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி அளித்ததைபோல் ஆலயம், சூராவ், மண்டபம், சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்காக முழுமையான ஆய்வு மேற்கொண்டு 30 நாட்களுக்குள் தமக்கு பதில் அளிக்குமாறு மாநில மந்திரி பெசாரிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளதாக திருமதி இந்திராணி மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment