Tuesday 28 July 2020

நஜிப் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்தில் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையில் தீர்ப்பில் நீதிபதி முகமர் நஸ்லான் முகமட் கஸாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.

42 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகங்களை எழுப்ப நஜிப் தவறி விட்டார்.

இதன் அடிப்படையிலேயே அரசு தரப்பு நஜிப் மீது வழக்கு தொடர முடிந்தது என்று நீதிபதி சொன்னார்.

அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளிலும் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மலேசியாவின் வரலாற்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் பிரதமராக டத்தோஶ்ரீ நஜிப் திகழ்கிறார்.

No comments:

Post a Comment