Monday 27 July 2020

மலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்துரைகள் முன்மொழிவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஷா ஆலம், செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா ஆலயம் (மலைப்படி மாரியம்மன்) ஆலயம் அகற்றப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய நில அலுவலகத்திடம் வலியுறுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்வாலயம் விவகாரம் தொடர்பில் மத்திய நில அலுவலகம், ஆலய தரப்பு  உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.


முதலாவதாக, ஆலயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இரண்டாவதாக ஆலயத்தை அகற்றுவற்கு முன்னர் வேறு இடம் ஆலயத்திற்கு (செக்‌ஷன் 11இல் மட்டும்) மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டு என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தோட்டப்புற இந்தியர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயம் வெறுமனே அகற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.


இந்த மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணவே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முற்பட வேண்டாம், ஆலயம், தமிழ்ப்பள்ளி, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்

செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள மலைப்படி மாரியம்மன் ஆலயம் அந்நிலத்திருந்து அகற்றப்பட வேண்டும் என்று அண்மையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


No comments:

Post a Comment