Wednesday 29 July 2020

வங்கிக் கடன் செலுத்தும் தவணைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்கள் தங்களது வங்கிக் கடனை செலுத்துவதற்கான தவணைக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

ஆனால் இந்த சலுகை  இவ்வாண்டு வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே ஆகும். வேலை இழந்தவர்கள், தற்போது வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதன் தொடர்பில் நிதியமைச்சர், பேங்க் நெகரா ஆளுநருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் அம்லபடுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் தங்களது வீடு, வாகன கடன் செலுத்தும் தவணை ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment