Tuesday 28 July 2020

தேர்தலில் போட்டியிடலாம்; வாக்களிக்கலாம்- மேல் முறையீட்டு வழக்கில் டத்தோ சிவராஜ் வெற்றி

கோலாலம்பூர்-
தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த  வழக்கில் மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வெற்றி பெற்றார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் சிவராஜுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்தும் உத்தரவிட்டது  டத்தோஶ்ரீ கமாலுடின் முகமட் சைட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம்.

கேமரன் மலை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ சிவராஜ் பூர்வக்குடியினருக்கு கையூட்டு வழங்கியதன் குற்றச்சாட்டின் பேரில்  2018ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின்  முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று டத்தோ சிவராஜ்  வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, தமக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமை தமக்கு மீண்டும் வழங்கப்பட்டதில் பேரானந்தம் கொள்கிறேன்.

மேலும் இவ்வழக்கில் தமக்கு ஆதரவாக இருந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி கொள்வதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment