Friday 10 July 2020

சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு

கோவிட்-19 காலகட்டத்திலும் பொதுத் தேர்தலை அறிவித்த சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.

காலை 8.00 மணி முதல் 1,100 வாக்களிப்பு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

2,653,942 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சமூக இடவெளி உட்பட முன்னேற்பாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடந்தாண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவது 12 மில்லயன் பேரை பாதித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment