Wednesday 22 July 2020

சுழல் முறையில் 54 பள்ளிகள் செயல்பட தொடங்கின

கோலாலம்பூர்-
இன்று முழுமையாக செயல்பட்டுள்ள பள்ளித் தவணையில்  54 பள்ளிகள் சுழல் முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. போதிய இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதால் இந்த பள்ளிகள் அனைத்தும் காலை, மாலை என இரு வேளை பள்ளிகளாக செயல்படுகின்றன கல்வித்துறை தலைமை இயக்குனர் டாக்டர் ஹபிபா அப்துல் ரஹிம் தெரிவித்தார். 

கோவிட்-19 தாக்கத்தின் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதலாம் வகுப்பு நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

No comments:

Post a Comment