Thursday 2 July 2020

'டத்தோஶ்ரீ' அந்தஸ்துடைய இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை; 11 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா-

டத்தோஶ்ரீ அந்தஸ்து கொண்ட இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவு தலைவர் ஃபாட்ஸில் அஹ்மாட் தெரிவித்தார்.

இந்த கடத்தல், கொலை சம்பவத்திற்கு பின்னணியில் கடன் அல்லது தொழில் ரீதியிலான நோக்கமே அடிப்படையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இச்சம்பவம் தொடர்பில் ஒரு வங்காளதேசி உட்பட 11 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


கடந்த ஜூன் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் உள்ள மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த டத்தோஶ்ரீ ஆறுமுகம் சில நபர்களாக் கடத்தப்பட்டார்.

பின்னர் ஜூன் 27ஆம் தேதி அவரின் சடலம் ரவாங்கில் கண்டெடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment