Tuesday 14 July 2020

வறுமை ஒழிப்பு திட்டத்தில் சிலாங்கூர் முன்மாதிரியாக உருவெடுக்கும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிடும் வகையில் முன்னெடுக்கப்படும் உதவித் திட்டத்தின் வாயிலான பெறப்படும் தகவல்களைக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு (SSIPR) உருவாக்கப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது உரையாற்றிய கணபதிராவ், இம்மாநிலத்திலுள்ள வசதி குறைந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி நலத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

தற்போது மாநில அரசு வழங்கும் புளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு உதவித் திட்டம், பெருநாள் காலத்தின்போது வறுமை குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டு ஆகியவற்றின் வழி வறுமை கோட்டில் உள்ள மக்களின் தரவுகள் திரட்டப்படுகின்றன.

இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி கண்ட முதன்மை மாநிலமாக சிலாங்கூரை உருமாற்றும் மாநில அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப இந்த SSIPR-ஐ வலுப்படுத்தும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment