Wednesday 29 July 2020

டத்தோஶ்ரீ நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை; வெ.210 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்-

வெ.42 மில்லியன் வெள்ளி மோசடி நிகழ்த்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  டத்தோஸ்ரீ நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பில் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் 72 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும் இச்சிறைத் தண்டனை ஒருசேர விதிக்கப்படுவதால் 12 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் கூறினார்.

மாதத்திற்கு இரு முறை காவல் நிலையத்தில் டத்தோஸ்ரீ நஜிப் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெ. 20 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி வெளியேறினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment