Tuesday 30 October 2018

கடலில் விழுந்தது பயணிகள் விமானம்


ஜகார்த்தா-
காணாமல் போனதாக கூறப்பட்ட லயன் ஏர பயணிகள் விமானம் கடலில் விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சும் வான் போக்குவரத்து இலாகாவும் இதை உறுதி செய்துள்ள நிலையில் அந்த விமானம் கடலில் விழுவதற்கு முன்னர் சுகார்த்தோ-ஹாத்தா அனைத்துலக விமான நிலையத்திற்கு திரும்புவதற்கு விமானி சமிஞ்சை கொடுத்துள்ளார். ஆயினும் அதற்குள் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்துள்ளது.

இன்று காலை 6.20 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் விமானம் 13 நிமிடங்களில் தனது தொடர்பை இழந்தது.


No comments:

Post a Comment