Tuesday 30 October 2018

பயணிகள் விமானம் மாயமானது: கடலில் விழுந்ததா?


ஜகார்த்தா-
ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போனது.

ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6.20 மணிக்கு புறப்பட்ட அவ்விமானம் 13 நிமிடங்களில் தகவல் தொடர்பு கோபுரத்துடனான சிக்னலை இழந்தது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் எத்தனை பயணிகள் பயணித்துள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment