Sunday 24 June 2018

பிபிபிஎம் கட்சியில் இணைவது சாதாரண ஒன்றல்ல- பேரா மந்திரி பெசார்

ஈப்போ-
பெர்ச்சத்து கட்சியில் இணைவது சாதாரண ஒன்றல்ல. கட்சியில் இணைத்துக் கொள்ளும் முடிவு கட்சியின் தலைமைத்துவத்தை பொறுத்தது பேரா மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமு தெரிவித்தார்.

பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நோர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்து வெளியேறி பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அஸுமு ஃபைசால்  கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொள்வது கட்சியின் தலைமைத்துவம் பொறுத்தது. பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பிபிபிஎம் கட்சியில் சேர்வது தலைமைத்துவத்தை சார்ந்தது, உறுப்பினர் விண்ணப்பத்தை கட்சி தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைப்போம்.

அந்த விண்ணப்பத்தை ஏற்பதும் நிராகரிப்பது கட்சித் தலைவர்களின் முடிவை பொறுத்தது ஆகும் என பாடாங் தஞ்சோங் ரம்புத்தானில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment