Wednesday 27 June 2018

யுனிசெம் நிறுவனம் வெ. 5 லட்சம் வழங்கியது

ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் கடனை அடைப்பதற்காக யுனிசெம் நிறுவனம் (Unisem (M) Sdn.Bhd.) 5 லட்சம் வெள்ளி நன்கொடை வழங்கியது.

இன்று மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அஸுமுவிடம் இதற்கான காசோலையை அந்நிறுவனத்தின் தலைவர்  ஜோன் சியா சின் ஸெட் வழங்கினார்.

காசோலையை பெற்று கொண்ட மந்திரி பெசார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் இயங்கும் யுனிசெம் நிறுவனம் 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும் என்றார்.

தாபோங் ஹராப்பான் திட்டத்திற்கு பேரா அரசின் மூலமாக 5 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என மேலும் கூறினார்

No comments:

Post a Comment