Wednesday 27 June 2018

அமைச்சராகிறார் சேவியர் ஜெயகுமார் - துணை அமைச்சராகிறார் சிவராசா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அடுத்த வாரம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இரு கூடுதலாக இரு  இந்தியர்கள் அமைச்சராகவும் துணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமர் துன் மகாதீர் தலைமையில் அமையவுள்ள இந்த அமைச்சரவையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் நீர், நில, இயற்கை வள அமைச்சராகவும்  சிவராசா ராசையா கிராமப்புற, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராகவும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என இன்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அமைச்சரவையில் ஜசெகவைச் சேர்ந்த எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும் கோபிந்த் சிங் டியோ தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைக்க இந்தியர்கள் அளித்த ஆதரவுக்கு ஏற்ப அமைச்சரவையில் முன்பை விட கூடுதலான பதவி வழங்கப்படும் என்ற இந்தியர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment