Monday 22 October 2018

தேர்தலில் முறைகேடுகள்; ஆட்சேபம் தெரிவித்தார் டான்ஶ்ரீ ராமசாமி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் பல்வேறு குளறுபடிகளும் அதிகார அத்துமீறலும் நடந்திருப்பதாக துணைத் தலைவர் பதவிக்கு
போட்டியிட்ட டான்ஶ்ரீ எம்.ராமசாமி ஆட்சேபம் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற சில வாக்களிப்பு மையங்களில் டான்ஶ்ரீ ராமசாமியின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை எனவும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

இதனை தொடர்ந்து, தேர்தல் நடவடிக்கைகள் குறித்த தமது ஆட்சேப கடிதத்தை டான்ஶ்ரீ ராமசாமி நேற்று அக்கட்சியின் தலைமைச் செயலாளரிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment