Tuesday 23 October 2018

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது மக்களின் உரிமை- துன் மகாதீர்


கோலாலம்பூர்-
நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

எனக்கு பிறகு நாட்டை தலைமையேற்று வழிநடத்தக்கூடிய சிறந்த தலைவர் யார் என்பதை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

எனக்கு பிறகு டத்தோஶ்ரீ அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன்.

ஆனால் யாரை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் குரல் கொடுக்கலாம்.  மக்கள் அப்பதவிக்கு வேறொருவரை விரும்பினால் அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்.

நீண்ட நாட்களுக்கு இப்பதவியை நான் பிடித்து கொண்டிருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.

என்னை விட சிறந்த ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று என்னால் வாக்குறுதி அளிக்க முடியாது.  ஏனெனில் முன்பு துன் அப்துல்லா அஹ்மாட் படாவியிடம் ஒப்படைத்தேன். அவர் ஒரு சமயவாதியாக இருந்தாலும் நடந்ததை எண்ணி பாருங்கள்.

அவருக்கு பிறகு வந்த டத்தோஶ்ரீ நஜிப், முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் புதல்வராக இருந்தாலும் என்ன நடந்தது என்பதை பாருங்கள் என்று செக்‌ஷன் 15இல் நடைபெற்ற துன் மகாதீருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment