Tuesday 30 October 2018

மக்களுக்கான சேவையை முன்னெடுக்கவே போட்டியிட்டேன்- கேசவன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டார மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் பொருட்டே இத்தொகுதியின் பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.

மக்களின் பிரதிநிதியாகவும் கட்சியின் தலைவராகவும் விளங்கும் வேளையில் கட்சிக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்கிட முடியும்.

அதன் அடிப்படையிலேயே இத்தொகுதியின் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். நான்கு முனைப் போட்டி நிலவிய போதிலும் கட்சியினர் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளனர்.

தனது வெற்றிக்கு வாக்களித்த கட்சியினருக்கு நன்றி கூறி கொள்ளும் வேளையில் மக்களுக்கான எனது சேவை துரிதமாக மேற்கொள்ளப்படும் என கேசவன் கூறினார்.

No comments:

Post a Comment