Monday 7 May 2018

வெற்றிப் பெற்றால் காப்பார் மக்களின் பிரச்சினைகளை முதலில் களைவேன் ! – டத்தோ மோகனா முனியாண்டி


செய்தி- படங்கள் : மோகன்ராஜ் வில்லவன்

காப்பார், மே 6 -
வருகின்ற நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் காப்பார் வட்டாரத்தில் நிழுவையிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை களவவேன் என்று காப்பார் நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் டத்தோ மோகனா முனியாண்டி செய்தியாளர்களிடம் கூறினார்.

இங்குள்ள மக்களிடேயை நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. வெற்றி பெற்றப் பின் இங்குள்ள மகளிர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கி அவர்களுக்கான வருமானத்தை வீட்டில் இருந்தே ஈட்டுவதற்கு உதவவுள்ளேன்.


காப்பார் வட்டாரத்திலுள்ள சாலை பிரச்சினை, மக்களின் அடிப்படை பிரச்சினை, வேலை வாய்ப்புகள் என பல பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வு கண்டறிவேன். இதற்கிடையில், மக்கள் வாக்களிப்பதற்கு முன் என்னை அறிந்து வாக்களிக்க வேண்டும். அதலால் ஒவ்வோரு வாக்காளர்களையும் நேரடியாக அவர்களை வீட்டில் சென்று சந்தித்து வருகின்றார்.

காப்பார் மக்களுக்காக “காசே காப்பார்” எனும் 24 மணி நேர சேவை மையம் உருவாக்கவுள்ளேன். அதேவேளையில் இளைஞர்களுக்கு வேளை வாய்ப்பும் வர்த்தகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment