Saturday 9 May 2020

முன்வரிசை பணியாளர்களின் தியாகத்தை சித்திரமாக வரைந்து போற்றுவோம்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

பட்டர்வொர்த்-
உலகத்தையே உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை காக்க மருத்துவப் பணியார்களும் அதிலிருந்து மக்களை காக்கப் போராடும் போலீஸ், ராணுவப் படையினர் உட்பட அனைத்து முன்வரிசை பணியாளர்களின் சேவையையும் நாம் அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

முன்வரிசை பணியாளர்களின் சேவைய போற்றும் வகையில் அனைத்து மலேசியரும் தங்களது வீட்டின் முன்புறம் முன்வரிசை பணியாளர்களின் ஓவியங்களை வரைந்து வைக்க வேண்டும்.

உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ள நிலையில்  மக்களை பாதுகாக்க முன்வரிசை பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வருகின்றனர்.

அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கியிருக்கும் இந்த பிரச்சாரம் நாடு தழுவிய நிலையில் மக்களிடம் கொண்டுச் சேர்க்கப்படும்.

நாட்டுக்கு அவர்கள் ஆற்றுகின்ற பங்களிப்பை சித்திரத்தின் வாயிலாக நாம் போற்றி கொண்டாடுவோம் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment