Wednesday 27 May 2020

மதுவை தடை செய்வதை காட்டிலும் சட்டங்களை கடுமையாக்குக- வர்த்தகக் குழுமம் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா-

குடிபோதையில் வாகனமோட்டி விபத்துகள் ஏற்படும் சம்பவங்களை களைவதற்கு தீர்வாக மது உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்துவதற்கு பதிலாக நடப்பில் உள்ள சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வர்த்தக குழுமம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.


மது விற்பனையை தடை செய்வதை காட்டிலும் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதே சிறந்த தீர்வாகும் என்று மலேசியா- சிங்கப்பூருக்கான காஃப்பி கடை உரிமையாளர்கள் பொதுச் சங்கத்தின்  தலைவர் ஹு சு மோங் தெரிவித்தார்.

கடுமையான சட்டங்கள் அமலில் இருந்தால் அச்சட்டத்தை மீறுவதற்கு மது அருந்துபவர்கள் யோசிக்கக்கூடும். அண்டை நாட்டில் மது அருந்துபவர்களிடம்  இதுபோன்ற பிரச்சினைகள் காண முடிவதில்லை. ஏனெனில் அங்கு சட்டம் கடுமையாக உள்ளது.

இங்கு குடிபோதையில் வாகனம் செலுத்தினால் அதற்கான அபராதம் குறைவாக உள்ளது. பிறருக்கு ஆபத்தை விளைவிப்பது கடுமையான குற்றமாக வகைப்படுத்த வேண்டும்..

முதன் முறையாக தவறு இழைப்பவர்களுக்கு  100,000 வெள்ளி அபராதமும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனையும் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டால் , அதுவொரு குற்றச்செயலென வகைப்படுத்தினால் தவறிழைப்பவர்கள் அச்சம் கொள்ளக்கூடும் என்று அவர் மேலும் சொன்னார்.


No comments:

Post a Comment