Thursday 28 May 2020

கோவிட்-19: நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் மரணம்

உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் உயிரிழந்துள்ளதாக மலேசியா அமெரிக்கா சங்கம் தெரிவித்துள்ளது.
அதில் இருவர் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர் என்று அதன் தலைவர் கிம் போங் தெரிவித்தார்.

ஓர் உணவக உரிமையாளர், ரயில் நிலையத்தில் தொற்றுக்கு ஆளான ஒருவர் மட்டுமல்லாது புரூக்ளினில் வசித்து வந்த ஒரு மலேசிய தம்பதியர் மரணமடைந்துள்ளனர். இந்த தகவல் யாவும் கடந்த வாரம் கிடைக்கப்பெற்றது என்று அவர் சொன்னார்.

நியூயார்க் நகரில் 30 மலேசியர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

நியூயார்க் நகரில் மட்டும் கோவிட்-19க்கு 360,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23,282 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்த கொடிய நோய்க்கு அமெரிக்காவில் இதுவரை 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment