Wednesday 27 May 2020

மக்களா? பொருளாதாரமா?- அரசின் நிலைப்பாடு என்ன?

கோலாலம்பூர்-
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட பரவலுக்கி மலேசியா தன்னை எவ்வாறு தயார்படுத்தி கொள்ளப் போகிறது எனும் கேள்வி எழுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் பரவத் தொடங்கிய  கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக க மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் ஓரளவு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மே மாதம் முதல் இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்துறைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்வழி வீட்டுக்குள் முடங்கி கிடந்த பலர் தங்களது வேலை காரணமாக வெளியே வர தொடங்கினர்.

கோவிட்-19 பரவலை முற்றிலுமாக துடைத்தொழிக்கப்படாத நிலையில் மக்களை வெளியே நடமாட்ட விட்டதன் விளைவு தற்போது குறைந்து வந்த பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சில நாட்களாக இரு இலக்காக இருந்த இவ்வெண்ணிக்கை தற்போது மூன்று இலக்காக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனும் அச்சத்தில் மக்களின் உயிரா? நாட்டின் பொருளாதாரமா? எனும் கேள்வி அரசாங்கத்தை நோக்கி எழலாம்.

இந்த வைரஸ் தொற்றினால் பல தொழில்கூடங்கள் முடக்கப்பட்ட நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டதை அனைவரும் அறிவோம்.

இன்னும் பொருளாதாரச் சரிவை சந்தித்தால் அது நாட்டுக்கு உகந்ததல்ல எனும் நிலையிலே தொழில்துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.

இப்போது மீண்டும் இரண்டாம் கட்ட வைரஸ் பரவல் தொடங்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் பங்களிப்பு துரிதமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மக்களா? பொருளாதாரமா? எனும் கேள்விக்கு அரசாங்கம் எடுக்கவிருக்கும் ஆக்ககரமான முடிவு என்னவாக இருக்கும்?

No comments:

Post a Comment