Friday 29 May 2020

பள்ளிகள் மீண்டும் திறப்பதில் பல்வேறு விவகாரங்கள் ஆராயப்பட வேண்டும்- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படுவதில் பல்வேறு விவகாரங்கள் ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்படும்போது ஆசியர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல் நடைமுறை (SOP), மாணவர் எண்ணிக்கை, வகுப்புகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய இடைவெளி, மாணவர் பாதுகாப்பு, உடல் வெப்பப் பரிசோதனை ஆகிய விவகாரங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் தற்போது கல்வி கற்கும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது இதே நடைமுறை கடைபிடிக்கப்படாது. 15க்கும் குறைவான மாணவர்களே  ஒரு வகுப்பில் இருக்க முடியும் என்ற புதிய விதிமுறை அமலாக்கம் செய்யப்படும்போது அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

வகுப்புகளில் மாணவர்கள் குறைக்கப்படும்போது ஒரு நேர வகுப்பாக இருந்த கல்வி முறை இனி காலை, மாலை நேர வகுப்புகளாக செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

பள்ளி கல்வி முறை தொடங்கப்படுவதில் அவசரம் காட்டப்படாமல் பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து தீவிர முடிவு எடுக்கப்படுவது அவசியமாகும் என்று சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment