Saturday 2 May 2020

உழைப்பாளர்களின் தியாகத்தாலே இது சாத்தியமானது- பிரதமர் நெகிழ்ச்சி

புத்ராஜெயா-
உழைப்பாளர்களின் தியாகத்தாலே கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.
உயிர்கொல்லி நோயான கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டது.

நாட்டுக்கு இது புது அனுபவமாக இருந்தாலும் அரசாங்கம் அறிவித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மதித்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த காரணத்தினால் இந்த வைரஸ் பரவலை வெகுவாக குறைக்க முடிந்தது.

வேலையிடங்களுக்குச் செல்லாமல் வருமானத்தை இழக்கும் தருவாயிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருந்த காரணத்தினாலேயே இந்நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இது உழைப்பாளர்களின் தியாகத்தால் மட்டுமே சாத்தியமானது என்று தொழிலாளர் தின சிறப்புரை நேரலையில் உரையாற்றியபோது டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment