Tuesday 26 May 2020

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் கார்த்திக் மரணம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் தொகுதி மஇகா இளைஞர் பிரிவிலும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் துடிப்புடன் செயல்பட்டு வந்த ஆசிரியர் கார்த்திக் சந்திரன் (வயது 33) அகால மரணமடைந்தது இவ்வட்டார பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்றிரவு கம்போங் கமுனிங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த்தில் பலத்த காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார் என அறியப்படுகிறது.

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் பயிற்சி ஆசிரியராக பணியை தொடங்கிய கார்த்திக், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு பின்னர் பந்திங்கில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்தார்.

சுங்கை சிப்புட் சுங்கை ரேலா மஇகா கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொது இயக்கங்களின் வாயிலாகவும் கார்த்திக் பல சேவைகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அவரின் இழப்பு சுங்கை சிப்புட் மஇகாவுக்கு பேரிழப்பு என்று அதன் தலைவர் இராமகவுண்டர், செயலாளர் கி.மணிமாறன் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் கார்த்திக்கின் மரணச் செய்தியை அறிந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் இராஜகோபால், பேரா மஇகா தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment