Sunday 30 September 2018

அன்வாரின் வாக்குறுதிகள் என்னென்ன தெரியுமா?


போர்ட்டிக்சன் -
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தொகுதி மக்களுக்காக சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அதிகரிப்பது, போர்ட்டிக்சன் கடற்கரையை தூய்மைபடுத்துவது, சுற்றுலா தலமான இங்குள்ள மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவையே அன்வார்  வழங்கியுள்ள வாக்குறுதிகள் ஆகும்.

இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் மக்களிடம் உரையாற்றுகையில் அன்வார் இந்த வாக்குறுதிகளை வழங்கினார்.

No comments:

Post a Comment