Tuesday 25 September 2018

நாடாளுமன்றத் தேர்தல்; 100 தொகுதிகளில் போட்டி



புதுடெல்லி-
டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பல முக்கிய மாநிலங்களில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல் அமைச்சருமான கெஜ்ரிவால் அண்மையில் அரியானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டு இருக்கிறது. இதில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த வெற்றி கிடைத்துவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளுடன் எங்களால் பேரம் பேச முடியும்.

டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி வலிமையாக உள்ளது. உத்தரபிரதேசம், குஜராத்,  இன்னும் சில மாநிலங்களிலும் எங்கள் கட்சி போட்டியிடும். இதேபோல் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 4 பேர் வெற்றி கண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment