Tuesday 25 September 2018

45 நிமிடங்களில் மைகார்ட்; அறிமுகம் கண்டது நடமாடும் பேருந்து சேவை



புத்ராஜெயா-
தேசிய பதிவு இலாகாவின் (ஜேபிஎன்)நடமாடும் பேருந்து சேவையின் வாயிலாக, 45 நிமிடங்களில் அடையாள அட்டையைத் தயார்ப்படுத்தப்படும் என இதன் தலைமை இயக்குனர் டத்தோ முகமட் ரஷின் அப்துல்லா தெரிவித்தார்.

இச்சேவையின் வாயிலாக மைகார்டை  கிட்டத்தட்ட 45 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். மைக்கார்டுக்கு விண்ணப்படும் செய்து உடனே அந்த ஆவணப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணம் செய்து 5 நாட்களுக்குப் பின்னர் தங்களின் அடையாள அட்டையை எந்தப் ஜேபிஎன் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த நடமாடும் பேருந்து சேவைத் திட்டம் கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment