Friday 10 April 2020

MCO நீட்டிப்பு: சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது

கோலாலம்பூர்-
தற்போது அமலில் உள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பு செய்வது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா என்பது நாளை முடிவு செய்யப்படும்.

ஆயினும் இந்நடவடிக்கை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது சுகாதார அமைச்சின் ஆலோனையை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மக்களிடையே சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 18ஆம் தேதி மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டு மக்களின் நலன் கருதி பிரதமர் அறிவிக்கப்போகும் முடிவு என்ன? என்பதே மலேசியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment