Friday 24 April 2020

எம்சிஓ- மே 12 வரை நீட்டிப்பு- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடமாட்ட கட்டுபாட்டு ஆணையை மே 12 ஆம் தேதி மலேசிய அரசு நீட்டித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கோவிட்-19 வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 26 லட்சம் மக்கள் பாதித்துள்ள நிலையில்  ஒரு லட்சத்து 85 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்.

மலேசியாவில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 18ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்தார்.

இன்று நேரலையின் மூலம் மக்களிடம் பேசிய அவர், வரும் 28ஆம் தேதியுடன் நிறைவு பெறும் மூன்றாம் கட்ட எம்சிஓ ஆணை 29ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு எம்சிஓ-வை நீட்டிக்கும் பரிந்ரதுரையை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment