Thursday 16 April 2020

கோவிட்-19: இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகும் சீனா

பெய்ஜிங்-
சீனாவின், வுஹான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தற்போது 200க்கும் அதிகமான நாடுகளில் பரவி பல மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்நோயின் இரண்டாவது கோரத் தாண்டவத்திற்கு சீனா தயாராகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த திணறிய சீனா, 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3,000 பேர் இந்நோய் தொற்றுக்கு பலியாகினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீனாவில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என சீனா அறிவித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 89 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று சீனா அறிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று முழுவதுமாக முறியடிக்கப்பட்டது என நிம்மதி பெருமூச்சு விட தொடங்கிய சீனா, தற்போது இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment