Friday 10 April 2020

MCO கண்காணிப்பு: போலீசுடன் ஜேபிஜே இணைந்து செயலாற்றும்

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறும் நடவடிக்கையை குறைப்பதற்கு ஏதுவாக இனி போலீஸ் படையினருடன் இணைந்து சாலை பாதுகாப்பு இலாகாவினர் இணைந்து பணியாற்றுவர் என்று பாதுகாப்பு துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது முதல் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 300க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

கட்டுப்பாட்டு ஆணையை மீறும் தரப்பினரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஜேபிஜே இலாகாவினரும் இனி சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.

மார்ச் 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட கட்டுப்பபாட்டு ஆணையை 95 விழுக்காட்டினர் மட்டுமே மதித்து வீட்டில் முடங்கியுள்ள நிலையில் ஏனைய 5 விழுக்காட்டினர் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களிடேயே சமூக இடைவெளியை உருவாக்கும் நோக்கில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை  அமல்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment