Saturday 4 April 2020

கோவிட்-19: உலக அளவில் 54 ஆயிரம் பேர் உயிரிழப்பு

கோவிட்-19 வைரஸ் காரணமாக உலக அளவில்1,030,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54,229 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 220,003 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். இது இன்றைய இரவு 7.45 மணி வரைக்குமான நிலவரம் ஆகும்.

மலேசியா
* கோவிட்-19 வைரஸ் தொற்றால் மலேசியாவில் மொத்தம் 3,333 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 53 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று வரை 50ஆக இருந்த இவ்வெண்ணிக்கை இன்று 3 பேர் உயிரிழந்ததால் 53ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 217 பேர் இந்நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா
* உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 245,442 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6,098 பேர் மரணமடைந்த நிலையில் 10,411 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.

இத்தாலி
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. அங்கு இதுவரை 115,242 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  13,915 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் இத்தாலி திகழ்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி திகழ்வதால் அங்கு மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூர்
* உலகில் சிறிய நாடாக கருதப்படும் சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment