Thursday 16 April 2020

எம்சிஓ ஜூன் வரை நீட்டிப்பா? இஸ்மாயில் சப்ரி விளக்கம்

புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவது சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மக்கள் பிடிவாதத்தன்மையுடன் நடந்துக் கொண்டால்  எம்சிஓ காலவரம்பு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ அப்தில் ஹமிட் படோர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, எம்சிஓ காலவரம்பு நீட்டிப்பு சுகாதார அமைச்சின் ஆலோசனையை பொறுத்தே அரசாங்கம் முடிவெடுக்கும் என்று சொன்னார்.

No comments:

Post a Comment