Friday 3 April 2020

கோவிட்-19: மிக தாமதமாக அனுமதிக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் மரணம்

புத்ராஜெயா-
கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மிக தாமதமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாலே அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை  இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.,
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27, 34 வயதுடைய இளைஞர்கள் மூன்றாவது,நான்காவது கட்ட அபாய நிலையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர்.

மூச்சு விடபெரும் சிரமத்தை எதிர்நோக்கிய அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மிக தாமதமாக வந்த காரணத்தினாலேயே அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment