Friday 10 April 2020

MCO விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முன்பு போல் இருக்க முடியாது

கோலாலம்பூர்-
மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் முந்தைய காலம் போன்று சுதந்திரமான முறையில் செயல்பட முடியாது என்று பாதுகாப்புத் துறை முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதியுடன் மக்கள்  நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருகிறது. ஆயினும் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டாலும் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.

உதாரணத்திற்கு, பொது கூட்டங்கள், பேரணி போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில் சில கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்படலாம் என்றார் அவர்.

இந்த புதிய கட்டுப்பாடுகளின் மூலம் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஒத்திவைக்கபடலாம். இது ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்ற அவர், மக்களின் நலனை காக்கும் பொருட்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றர் அவர்.

No comments:

Post a Comment