Wednesday 1 April 2020

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 7 பேர் பதவியேற்பு

ஈப்போ-
பேராக் மாநிலத்தில் தேசிய கூட்டணி (பெரிக்காத்தான் நேஷனல்) ஆட்சியமைத்துள்ள நிலையில் 7 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் புதிதாக பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
21 மாதங்கள் நீடித்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து தேசிய கூட்டணி அங்கு ஆட்சி அமைத்தது. அதன் மந்திரி பெசாராக  அஸுமு பைசால் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பேராக் அம்னோ தலைவர் டத்தோ சரானி முகம்மட் (கோத்தா தம்பான்), டத்தோ டாக்டர் வான் நோராஸிகின் வான் நோர்டின் (கம்போங் காஜா), டத்தோ ஷாருல் ஸமான் யாஹ்யா (ருங்குப்),  பாஸ் கட்சியைச் சேர்ந்த  ரஸ்மான் ஸக்காரியா (குனோங் செமாங்கோல்), முகமட் அக்மால்  கமாருடின் (செலாமா), பெர்சத்து கட்சியைச் சேர்ந்த  டத்தோ நோலி அஸிலின் (துவாலாங் செக்கா), அப்துல் யூனுஸ் ஜமாரி (குவாலா குராவ்) ஆகியோரே பேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment